sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தர்ப்பூசணி விலை வீழ்ச்சியால் இழப்பீடு கோரும் விவசாயிகள்

/

தர்ப்பூசணி விலை வீழ்ச்சியால் இழப்பீடு கோரும் விவசாயிகள்

தர்ப்பூசணி விலை வீழ்ச்சியால் இழப்பீடு கோரும் விவசாயிகள்

தர்ப்பூசணி விலை வீழ்ச்சியால் இழப்பீடு கோரும் விவசாயிகள்


ADDED : ஏப் 07, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தர்ப்பூசணி பழங்களில் ஊசி போட்டு நிற கலப்படம் செய்கின்றனர் என, ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தர்ப்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, கிலோ, 15 ரூபாய்க்கு விற்ற தர்ப்பூசணி தற்போது, கிலோ, 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

கள்ளச்சாராய விற்பனையை போலீசாரால் தடுக்க முடியாத நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தோர் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்கியது.

அதுபோல, உணவு பாதுகாப்புத்துறையால் தர்ப்பூசணி விலை சரிவடைந்து, தர்ப்பூசணி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஏக்கருக்கு தலா, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'தர்ப்பூசணி பழத்தில் செயற்கை சாயம் ஏற்றப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தவறான தகவல் பரப்பியதால், விலை வீழ்ச்சியடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தர்ப்பூசணி விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us