ADDED : ஆக 21, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : சரந்தாங்கியில் வட்டார வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் பாண்டி பண்ணையத்தின் முக்கியத்துவம், நன்மைகளை குறித்தும், வட்டார வேளாண் அலுவலர் வசந்தகுமார் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், துணை வேளாண் அலுவலர் பாலாமணி இயற்கை வேளாண்மை முறைகள் அதற்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் பேசினர். ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் சுருளிமலை மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டங்கள் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர்கள் ஈஸ்வரன், காதர் மொய்தீன், இந்திரஜித், வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், அட்மா திட்ட அலுவலர்கள் வசந்தி, சவுந்தர்ராஜன் பங்கேற்றனர்.

