sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

/

 தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

 தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

 தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்


ADDED : நவ 19, 2025 05:19 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ. 24 காலை 8:00 மணிக்கு 14 வயது, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது.

அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து 'அஸ்மிதா' என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 300 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள 14, 16 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'டிரையத்லான் ஏ' பிரிவில் 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளும் 'டிரையத்லான் பி' பிரிவில் 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 'சி' பிரிவில் 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், 600 மீட்டர் ஓட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'கிட்ஸ்' பிரிவில் ஈட்டி எறிதல் நடக்கிறது.

ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். அனுமதி இலவசம். ஆன்லைன் மூலம் sfw.kheloindia.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு சங்கம், சம்மேளனம் மூலம் சலுகைகள் வழங்கப்படும். இத்தகவலை மதுரை மாவட்ட தடகள சங்க செயலாளர் உஸ்மான் அலி தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 94459 55448.






      Dinamalar
      Follow us