ADDED : ஜன 28, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றியவர் சரண்யா, 34. இவர், மதுரை நகர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் கணவர், தன் இரு மகள்களுடன் வசித்தார்.
இவர், 2010ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்தது.
ஆறு மாதங்களுக்கு முன் சரண்யா புகாரின்படி, தல்லாகுளம் மகளிர் போலீசார் விசாரித்து சமரசம் செய்தனர். நேற்று மதியம் பணிக்கு வரவில்லை.
சக போலீசார் மொபைல் போனில் அழைத்தும் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சரண்யா துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.