ADDED : ஜன 12, 2025 04:56 AM
மதுரை: பொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜன. 19 மதியம் 3:30க்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06104) பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலுார் போர்ட், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3:30க்கு தாம்பரம் செல்லும்.
9 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு ஏ.சி., மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கியது.
'மெமு' ரயில்: பிப். 5 முதல் 14 வரை (ஞாயிறு தவிர்த்து) காலை 9:35க்கு கோவையில் இருந்து புறப்படும் 8 பெட்டிகள் கொண்ட 'மெமு' முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06106) மதியம் 1:10க்கு திண்டுக்கல் வரும். மறுமார்க்கத்தில் மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06107) மாலை 5:50க்கு கோவை செல்லும்.
இவ்விரு ரயில்கள் ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.