ADDED : டிச 12, 2024 08:06 AM
மதுரை : மதுரை அமலாக்க கோட்ட தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், துாத்துக்குடி அமலாக்க பிரிவு அலுவலர்கள் விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், சேத்துார், ராஜபாளையம், திருத்தங்கல், சிவகாசி, குறிச்சியார்பட்டி, ஆலங்குளம், நல்லமநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, தளவாய்புரம், சாத்துாரில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 10 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட மின்நுகர்வோருக்கு ரூ. 5 லட்சத்து 93 ஆயிரத்து 910 அபராதமாக விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க சமரசத் தொகையாக ரூ.28 ஆயிரம் செலுத்தியதால் போலீசில் புகார் செய்யப்படவில்லை.
மின்திருட்டு தகவல்களை 94430 37508 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

