/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு ஓட்டுனர்களுக்கு முதலுதவி பயிற்சி
/
அரசு ஓட்டுனர்களுக்கு முதலுதவி பயிற்சி
ADDED : பிப் 18, 2026 05:30 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அரசின் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பல்வேறு அரசுத்துறை வாகன ஓட்டுனர்களுக்கான முதலுதவி பயிற்சி இந்திய செஞ்சிலுவை சங்க கிளை சார்பில் வழங்கப்பட்டது. பள்ளி துணை இயக்குனர் பழனிவேல்சுந்தரம் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, ரத்த இழப்பை தடுக்கும் முறைகள், கட்டுப்போடும் விதம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்யக் கூடிய சி.பி.ஆர்., பயிற்சி, உடல் உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் முறைகள், வலிப்பு, பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றுக்கான முதலுதவிகள், விபத்தில்லா வாகனம் ஓட்டும் வழிமுறைகள் குறித்து பயிற்றுனர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார்.

