/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
/
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
ADDED : அக் 15, 2024 05:21 AM
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேர் நேற்று இரவு விமானம் வாயிலாக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களை வரவேற்று, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் வாயிலாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் புதுக்கோட்டை, மயிலாதுறை மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள், செப்.,25ல், விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதிகாலை நேரத்தில் அவர்கள் மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். மேலும், தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி, அனைவரையும் கைது செய்து, விசைபடகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின், அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 51 பேரையும் விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்திய துாதரக அதிகாரிகள், மீனவர்களை தங்கள் பராமரிப்பில் வைத்து, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தியதோடு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். இதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், நேற்றிரவு 51 மீனவர்களும் வந்தடைந்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் அவர்களை வரவேற்றதுடன், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.