நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி,மதுரை 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். எஸ்.ஐ.,க்கள் முருகேசன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். உறவின்முறை தலைவர் மாரியப்பன், செயலாளர் பொன்னையா, பொருளாளர்கள் முருகேசன், துரை, வீரமாரி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மருத்துவமனை அலுவலர்கள் ராஜசேகரன், செல்வம் முகாமை ஒருங்கிணைத்தனர்.

