ADDED : ஏப் 22, 2025 06:12 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணாநகர் உழவர் சந்தை விவசாயிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி முன்னிலை வகித்தார்.
மனோ ஆப்டிகல்ஸ் நிர்வாகி மனோஜ் குமார் 35 பேருக்கு கண் கண்ணாடி வழங்கினார். சங்கத்தலைவர் ஹரிகரன், செயலாளர் சதீஷ்குமார், உழவர் சந்தை விவசாயிகள் நலன் தலைவர் தவசுமுத்து, நிர்வாகி கோவர்தன் கலந்து கொண்டனர்.
