மதுரை மங்கையர்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பகவான் மஹாவீர் உதவிக் குழு சார்பில் இலவச செயற்கை மூட்டு பொருத்துதல் சிறப்பு முகாம் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. தலைவர் சரவண பிரதீப் குமார், இயக்குநர் சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமா, டீன்கள் செந்துார் பிரியதர்ஷினி, சுகந்தி, உதவிக்குழு செயலாளர் இந்தர் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 300 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.
மதுரை கரும்பாலை பி.டி., காலனி, ராஜாக்கூர், திடீர்நகர், அவனியாபுரம் பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பெண்களுக்கு சிறப்பு தொழில்முனைவோர் பயிற்சி நடந்தது. பெண்கள் பொருளாதார, தொழில் வளர்ச்சியில் முன்னேறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வாரிய சமுதாய வளர்ச்சி நிபுணர் லெஜீஸ், வளர்ச்சி அலுவலர் பூமிகா, வழக்கறிஞர் முத்துக்குமார், வாரிய உதவி பொறியாளர் சங்கீதா, குடியிருப்போர் சங்க தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

