ADDED : செப் 01, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து சேகரிக்கும் நடைமுறை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நேற்று துவங்கியது.
இதன்படி வீடுகளில் சேரும் ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கவனிப்புக் கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்க சிறிய வகை கலர் தொட்டிகளை மாநகராட்சி வழங்கியது. சிறப்பாக தரம் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ்குமார், துணை கமிஷனர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
