ADDED : ஜன 09, 2025 05:23 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.
செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தார். பேராசிரியை குணவதி, பொதுச் செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் பேராசிரியர்கள் ஆனந்தன், ஜெகநாதன், விஜயன், ராமசாமி, லட்சுமணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராசிரியர் ஆனந்தன் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
