ADDED : நவ 04, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:  சென்னையில் ரயில்வே மண்டலங்களுக்கு இடையேயான ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்.,) நாசவேலை சோதனை போட்டி நடந்தது.
இதில், மதுரை வெடிகுண்டு கண்டறிதல் பிரிவின் ஏட்டு அனந்தன், தங்கப் பதக்கம் வென்றார். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தெற்கு ரயில்வே ஆர்.பி.எப்., வென்றது.
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு கமிஷனர் அருள் ஜோதி, தலைமை பாதுகாப்பு கமிஷனர் முகமது இப்ராஹிம் ஆகியோர்பரிசு வழங்கினர்.

