/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : ஜூன் 05, 2025 01:31 AM
மதுரை: மதுரை புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவர் தனக்கன்குளம் நேதாஜிநகர் ரோட்டில் நடந்து சென்ற போது அரசு பஸ் மோதியதில் இடுப்பு எலும்பு உடைந்து நடக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இவர் தரப்பில் இழப்பீட்டுத் தொகை கேட்டு வழக்கறிஞர் பிரகாஷ் மூலமாக மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 2023 ல் சவுந்திரராஜனுக்கு மதுரை மண்டல டிப்போ சார்பில் ரூ. 4 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது வழங்கப்படவில்லை.
இதனிடையே இழப்பீட்டு தொகையை வட்டியுடன் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் புறப்பட தயாராக இருந்ததாழ்தள சொகுசு பஸ்சை சவுந்திரராஜன் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளருடன் சென்று ஜப்தி செய்தனர்.