sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

/

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


ADDED : நவ 22, 2024 04:41 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டத்தை அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநில தலைவர் டானியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை செல்வரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி கைதாகி இருப்பினும், இப்படுகொலை பிற அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மிகப்பெரிய அச்சம், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியிடத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இதேபோல கடந்த வாரம் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் செவிலியர் பாலியல் தாக்குதலுக்குள்ளானார். இந்நிலை மாற வேண்டுமானால், ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்தோருக்கு நடைமுறையில் உள்ளது போல, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதுபோல ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே ஏற்படுத்த வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் செல்வரமணியின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்த வேண்டும். கொலையாளிக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us