sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

/

வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்


ADDED : ஜன 29, 2025 05:12 AM

Google News

ADDED : ஜன 29, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் கொக்குளம் கண்ணன் தாக்கல் செய்த மனு: வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் பிப்.1 ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.

அரசு தரப்பு: வேங்கைவயலில் இருவரிடையே ஏற்பட்ட பிரச்னையால் சம்பவம் நடந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 389 சாட்சிகளிடம் விசாரித்துள்ளனர். 31 பேரிடம் டி.என்.ஏ., பரிசோதனை நடந்துள்ளது. 196 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலுள்ள ஆடியோ குரல் பதிவுகளின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டது. கழிவு கலந்த தண்ணீரை யாருக்கும் வினியோகிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதி இன்று (ஜன.29) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us