sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கலெக்டர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

/

கலெக்டர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

கலெக்டர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

கலெக்டர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்


ADDED : ஜன 11, 2025 05:04 AM

Google News

ADDED : ஜன 11, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூக பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்க தாக்கலான வழக்கில், 'கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு ஜல்லிக்கட்டு நடத்தும்,' என தமிழக அரசு தரப்பு கூறியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையை முடித்து வைத்தது.

அவனியாபுரம் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த பொதுநல மனு:

பாலமேடு, அலங்காநல்லுாரில் கிராம குழுவினரால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அவனியாபுரத்தில் கிராம குழுவினரின் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். இது சட்டவிரோதமானது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்புக்குழுவை அமைக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் மேலும் சிலர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு: 2024ல் கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தியது. அதுபோல் இம்முறையும் நடத்தப்படும்.

அனைத்து சமூக பிரதிநிதிகள் அடங்கிய 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மனுதாரர்களில் கல்யாணசுந்தரம், முனியசாமியும் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு தெரிவித்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள்: இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us