sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு ஐ.டி.ஐ., மாணவர் மர்மமான முறையில் கொலை

/

அரசு ஐ.டி.ஐ., மாணவர் மர்மமான முறையில் கொலை

அரசு ஐ.டி.ஐ., மாணவர் மர்மமான முறையில் கொலை

அரசு ஐ.டி.ஐ., மாணவர் மர்மமான முறையில் கொலை


ADDED : ஜூலை 16, 2025 02:32 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலைமான்:மதுரை மாவட்டம், ஒத்தக்கடை சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரசன்னா, 17. புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்தார். நேற்று முன்தினம் மாலை, இளமனுார் கண்மாய் கரையில் பாதி எரிந்த நிலையில், இவரது உடல் கிடந்தது.

தகவலின்படி, சிலைமான் போலீசார் விசாரித்தனர்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல ஐ.டி.ஐ.,க்கு சென்ற இவர், இளமனுாரில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வயதை சேர்ந்த, நான்கு பேருடன் கண்மாய் பகுதிக்கு அவர் வந்ததை, அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.

மாணவர் பிரசன்னா உடல் அருகே, ஐ.டி.ஐ., சீருடையின் சட்டை இருந்தது. அதன் காலர் பகுதியில் இருந்த டெய்லர் கடை பெயரை வைத்து, ஒத்தக்கடை டெய்லரிடம் போலீசார் விசாரித்தனர். அதன் அடிப்படையில் பிரசன்னா தான் இறந்திருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.

அதுபோல, எரித்து கொலை செய்யப்பட்டது பிரசன்னா தான் என்பதை, அவரது குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.பின், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, அரசு மருத்துவமனை முன், அவர்கள் மறியல் செய்தனர்; போலீசார் கலைத்தனர்.






      Dinamalar
      Follow us