/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கூட்டம்
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கூட்டம்
ADDED : செப் 24, 2024 05:01 AM
மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க கிளைக் கூட்டம் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ஒச்சாத்தேவன், கண்ணன், குணசீலன், சவுந்தரராஜன், சேதுராமன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை பணபலன்கள் வழங்காத அரசை கண்டிப்பது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 70 வயதுக்குப் பின்பு மருத்துவ செலவுக்காக 10 சதவீதம், 80 வயது நிரம்பியோருக்கு 15 சதவீதம் உயர்த்த வேண்டும். டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப, அலுவலக பணியாளர்கள் ஓய்வுபெறும்போது ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் மேற்பார்வையாளர்கள், உதவிப்பொறியளர், கிளை மேலாளர்கள் ஓய்வு பெறும்போது ரூ.50 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை வழங்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
அனைத்து ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 107 மாத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.