ADDED : ஆக 14, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 48வது பட்டமளிப்பு விழா நடந்தது.
செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். சென்னை க்ரிஸ்பி சொல்யூஷன்ஸ் இயக்குநர் நாகேஸ்வரன், 216 மாணவர்களுக்கு பட்டங்களும், 110 மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை உள்ளது. அதை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் திறமையானவர்களை மட்டுமே இந்த உலகம் அங்கீகரிக்கும். ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் இந்தியாவில் 33 ஆயிரம் பேர் வேலை இழந்தாலும், 83 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார். கல்லுாரி தலைவர் பன்ஷிதர், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள், வெங்கடேஸ்வரன், சரவணன், ராமசுப்பிரமணியன், முரளிதாஸ், முதல்வர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டனர்.
