ADDED : ஆக 14, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை வழியாக தினமும் இயக்கப்படும் மதுரை - குருவாயூர் - மதுரை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செப்., 10, 12ல் மதுரை - குருவாயூர் ரயில் (16327), கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செப்., 11, 13ல் குருவாயூர் - மதுரை ரயில் (16328), கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.
இரு ரயில்களும் கொல்லம் - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.