ADDED : ஏப் 22, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரியில் 'பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம்' 'உலக ஆரோக்கிய தினம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மல்லிகை ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது.
கல்லுாரி செயலாளர் அசோக்குமார், இயக்குநர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்கத் தலைவர் பத்மாவதி வரவேற்றார். பேராசிரியை முத்துலட்சுமி, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, டாக்டர் செல்வராணி பேசினர். ரோட்டரி சங்க செயலாளர் பூங்கொடி, பொருளாளர் உமாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவ ஆசிரியைகள் சுபாஷினி, மதுமிதா தொகுத்து வழங்கினர். முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா நன்றி கூறினார்.