ADDED : டிச 01, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரத்தில் சாரல் மழை
தாராபுரம், டிச. ௧-
தாராபுரம் நகரில் நேற்று காலை, 11:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, விட்டுவிட்டு சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆங்காங்கே சாரல் மழை பெய்ததால், இதமான சூழ்நிலை நிலவியது.