sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆதிதிராவிடர் பள்ளிகளை மேம்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

ஆதிதிராவிடர் பள்ளிகளை மேம்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆதிதிராவிடர் பள்ளிகளை மேம்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆதிதிராவிடர் பள்ளிகளை மேம்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : அக் 08, 2025 12:04 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்தி உறைவிட பள்ளிகளாக மாற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1138 பள்ளிகள், 1131 விடுதிகள் உள்ளன. இவற்றில் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை குறைகிறது. இங்கு 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 76 ஆயிரத்து 300. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவு. அரசு நலத்திட்டங்களை அறிவித்தாலும் அவை சரியான முறையில் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. இதனால் மாணவர் சேர்க்கை, கல்வித்தரம் குறைந்து வருகிறது. இப்பள்ளிகளை மத்திய அரசின் நிதியுதவியுடன் மேம்படுத்தினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். கல்வித் தரம் மேம்படும். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்தி உறைவிட பள்ளிகளாக மாற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். நீதிபதிகள் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.6 க்கு ஒத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us