/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
/
மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 08, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உசிலம்பட்டி அருகே உடன்காட்டுப்பட்டி தமிழரசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:உடன்காட்டுப்பட்டி கோயில் திருவிழாவையொட்டி மே 25ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி.,விக்கிரமங்கலம் போலீசாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.