sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பக்தர்களிடம் பணம் வசூலித்தால் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கோயிலில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பக்தர்களிடம் பணம் வசூலித்தால் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பக்தர்களிடம் பணம் வசூலித்தால் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பக்தர்களிடம் பணம் வசூலித்தால் வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 30, 2025 04:05 AM

Google News

ADDED : ஆக 30, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் அங்கீகாரமற்ற நபர்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும். அந்நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை சண்முகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டணம், இலவச பொது தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை கோயில் நிர்வாகம் விற்பனை செய்கிறது.

கோயில் இணையதளத்தில் பல்வேறு பூஜைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. கோயிலுக்குள் பக்தர்கள் நுழைவதை ஒழுங்குபடுத்த முறையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்யவில்லை.

சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 க்கான டிக்கெட்டுகள் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதிகாரப்பூர்வமற்ற நுழைவு வாயில்கள் வழியாக பக்தர்களை உள்ளே நுழைய அங்கீகரிக்கப்படாத நபர்கள் உதவுகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை. ஆனால் கோயிலில் அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. சட்டவிரோதமாக பணம் வழங்குவோரை, பூஜாரிகள் தோற்றத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத நபர்கள் கோயிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

ஒவ்வொருவரிடமும் மோசடியாக ரூ.2000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அந்த நபர்கள் வசூலிக்கின்றனர். தரிசன நுழைவு மற்றும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். அங்கீகரிக்கப்படாத நபர்கள், புரோக்கர்கள் தரிசன நுழைவு டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய, பணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சரத்குமார் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பக்தர்கள் அமைதியான முறையில் வழிபடும் ஏற்பாடுகளை உறுதி செய்வது அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தின் கடமை.

பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் அங்கீகாரமற்ற நபர்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும். அந்நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்.

கோயிலில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த துாத்துக்குடி எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us