sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பிள்ளையார்பட்டி கோயில் சொத்து, கணக்கு ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு 

/

 பிள்ளையார்பட்டி கோயில் சொத்து, கணக்கு ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு 

 பிள்ளையார்பட்டி கோயில் சொத்து, கணக்கு ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு 

 பிள்ளையார்பட்டி கோயில் சொத்து, கணக்கு ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு 


ADDED : டிச 27, 2025 07:24 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.1.76 கோடி, 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதில் தண்ணீர்மலை, முத்துராமன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் நவநீதராஜா, சுஜித் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறங்காவலர்களுக்கு நிலம் அல்லது சொத்துக்களை கையாளும் அதிகாரம் உள்ளதா, அறங்காவலர்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார்களா என சரிபார்க்க வேண்டும்.

தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பிற பொருட்கள், வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை சரிபார்க்க வேண்டும். யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், அவர்கள் இக்கமிஷனிடம் தெரிவிக்கலாம். கமிஷன் ஜன.,30ல் இந்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு ஜன.,30 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us