/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியை கொலை வழக்கில் விடுதலை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஆசிரியை கொலை வழக்கில் விடுதலை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியை கொலை வழக்கில் விடுதலை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியை கொலை வழக்கில் விடுதலை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 05, 2025 12:29 AM
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆசிரியையை கொலை செய்த வழக்கில் ஒருவரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. தண்டனை குறித்து கேள்வி எழுப்புவதற்காக அவரை ஆஜராக உத்தரவிட்டது.
ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி சரண்யா. ஈரோடு பெருந்துறையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர் பழனிசெட்டிபட்டி சிவாவிற்கு சகோதரி உறவுமுறை. அவர் சரண்யாவுடன் தவறான எண்ணத்தில் பழகி வந்தார். அவரை விரும்புவதாகக் கூறியதை சரண்யா ஏற்கவில்லை. சரண்யாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆத்திரமடைந்த சிவா 2015 ஜன.,22 ல் சரண்யாவின் வீட்டிற்கு சென்றார். அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். தேனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாகக்கூறி விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆண்டிபட்டி போலீஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத் தரவு: குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை குறித்து சிவாவிடம் கேள்வி எழுப்புவதற்காக அவர் நவ., 11ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றனர்.

