sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...மதுரை

/

ஒரு போன் போதுமே...மதுரை

ஒரு போன் போதுமே...மதுரை

ஒரு போன் போதுமே...மதுரை


ADDED : நவ 05, 2025 12:29 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொசுத்தொல்லை தாங்கலை

மதுரை எல்லீஸ்நகர் சாலை முத்து நகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்போர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சியும் கொசு மருந்து தெளிப்பதில்லை. அப்படி தெளித்தாலும் அதற்கு கொசுக்கள் மயங்குவதில்லை.

- எஸ். சுபா, எல்லீஸ்நகர்.

சாக்கடை பிரச்னை

மதுரை முத்துப்பட்டி யோக விநாயகர் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் அடிக்கடி சாக்கடை நீர் வெளியேறுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வீரராகவன், முத்துப்பட்டி

குடிநீரில் கழிவு

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில் குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது. பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கரன், பசும்பொன் நகர்.

ஆக்கிரமிப்பு அட்டகாசம்

நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. பயணிகளுக்கு தொந்தரவாக பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கங்கா, கீழக்குயில்குடி.

சுகாதாரக் கேடு

மதுரை காமராஜர் ரோடு இங்கிலீஷ் கிளப் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் சுகாதார கேட்டிற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகசுப்பிரமணியன், காமராஜர் ரோடு.

தேங்கும் நீர்

மதுரை முடக்குசாலை காந்தி தெருவில் புதியதாக சிமென்ட் ரோடு அமைத்தாலும், மழை நீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களின் உடல்நலம் கேள்விக்குறியாகிறது. நோய் பரவுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

- பகவதி, முடக்குசாலை.

தரப்படாத குடிநீர் இணைப்புகள்

மதுரை பெத்தானியாபுரம் பவர்லைன் 2 வது குறுக்குத்தெருவில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் இணைப்புகள் இன்னும் தரப்படவில்லை. காலம்தாழ்த்தாமல் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பத்மா, பெத்தானியாபுரம்.






      Dinamalar
      Follow us