ADDED : நவ 05, 2025 12:29 AM

கொசுத்தொல்லை தாங்கலை
மதுரை எல்லீஸ்நகர் சாலை முத்து நகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்போர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சியும் கொசு மருந்து தெளிப்பதில்லை. அப்படி தெளித்தாலும் அதற்கு கொசுக்கள் மயங்குவதில்லை.
- எஸ். சுபா, எல்லீஸ்நகர்.
சாக்கடை பிரச்னை
மதுரை முத்துப்பட்டி யோக விநாயகர் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் அடிக்கடி சாக்கடை நீர் வெளியேறுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வீரராகவன், முத்துப்பட்டி
குடிநீரில் கழிவு
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில் குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது. பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கரன், பசும்பொன் நகர்.
ஆக்கிரமிப்பு அட்டகாசம்
நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. பயணிகளுக்கு தொந்தரவாக பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கங்கா, கீழக்குயில்குடி.
சுகாதாரக் கேடு
மதுரை காமராஜர் ரோடு இங்கிலீஷ் கிளப் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் சுகாதார கேட்டிற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகசுப்பிரமணியன், காமராஜர் ரோடு.
தேங்கும் நீர்
மதுரை முடக்குசாலை காந்தி தெருவில் புதியதாக சிமென்ட் ரோடு அமைத்தாலும், மழை நீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களின் உடல்நலம் கேள்விக்குறியாகிறது. நோய் பரவுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
- பகவதி, முடக்குசாலை.
தரப்படாத குடிநீர் இணைப்புகள்
மதுரை பெத்தானியாபுரம் பவர்லைன் 2 வது குறுக்குத்தெருவில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் இணைப்புகள் இன்னும் தரப்படவில்லை. காலம்தாழ்த்தாமல் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-பத்மா, பெத்தானியாபுரம்.

