/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமயநல்லுார் ரோடு விபத்து தடுக்க நிபுணர் குழு ஆலோசனை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சமயநல்லுார் ரோடு விபத்து தடுக்க நிபுணர் குழு ஆலோசனை உயர்நீதிமன்றம் உத்தரவு
சமயநல்லுார் ரோடு விபத்து தடுக்க நிபுணர் குழு ஆலோசனை உயர்நீதிமன்றம் உத்தரவு
சமயநல்லுார் ரோடு விபத்து தடுக்க நிபுணர் குழு ஆலோசனை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 12, 2024 08:06 AM
மதுரை : மதுரை- திண்டுக்கல் ரோடு பரவை, சமயநல்லுாரில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்களை அரசு தரப்பில் கோர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பரவை செந்தில்குமார்,'திண்டுக்கல் ரோடு பரவை, சமயநல்லுார் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை, மதுரை எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நவ.29ல் அச்சாலையை ஆய்வு செய்தனர்.
அதே நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.பாத்திமா கல்லுாரி, பரவை மங்கையர்க்கரசி கல்லுாரி, கொண்டமாரி பாலம் பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக்கூறி அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது.
நீதிபதிகள்: விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மனுதாரர், மதுரை எஸ்.பி.,போக்குவரத்து துணைக் கமிஷனர் பரிந்துரை சமர்ப்பித்துள்ளனர். இதன் சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்களை அரசு தரப்பில் கோர வேண்டும். விசாரணை டிச.18 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.