sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூன் 26, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:

மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை சிலர் ஆக்கிரமித்து கடைகளை நடத்துகின்றனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படுகின்றன. கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். பஸ் ஸ்டாண்ட் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: பஸ் ஸ்டாண்ட் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆய்வு செய்து அடுத்தவாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us