sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மாநகராட்சியின் செயல்திட்டத்தை பின்பற்றி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மதுரை மாநகராட்சியின் செயல்திட்டத்தை பின்பற்றி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாநகராட்சியின் செயல்திட்டத்தை பின்பற்றி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாநகராட்சியின் செயல்திட்டத்தை பின்பற்றி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 27, 2025 07:15 AM

Google News

ADDED : ஆக 27, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியின் செயல்திட்டத்தை பின்பற்றி பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அசையா சொத்துக்களை மறு அளவீடு செய்து வரி சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனு மீது, ஜூலை 17 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின்படி, வரி நிர்ணய முறைகேடுகளை விசாரிக்க மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆக.,20ல் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை அளவீடு செய்யும் பணி எவ்வளவு காலவரம்பிற்குள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய செயல் திட்டத்தை கமிஷனர் ஆக.,26 ல் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேந்திரன்: இவ்வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமினில் வெளியே சென்றுள்ளனர்.

நீதிபதிகள்: கைது செய்வது, ஜாமினில் செல்வது வழக்கமான நடைமுறைதான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பர். ஜாமின் அனுமதிக்கக்கூடாது என உங்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து தேவையெனில் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

மாநகராட்சி கமிஷனரின் செயல்திட்டம் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் விநாயக் ஆஜராகி கமிஷனரின் செயல் திட்டத்தை தாக்கல் செய்தனர்.

அதில் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 839 சொத்து வரி கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் ஜூலையில் திருமண மண்டபங்கள், வணிக கட்டடங்களில் ஆய்வு செய்தனர். அதில் 69 க்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்குரிய வரி விதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அவற்றிற்கு 2022 முதல் சொத்துவரியை மாற்றியமைத்ததன் மூலம் அரையாண்டிற்கு ரூ.76.15 லட்சம் மாநகராட்சிக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும். இதனால், மாநகராட்சிக்கு 2022 முதல் வருவாய் ரூ.5.55 கோடி அதிகரிக்கும். கே.கே.நகரில் வணிக ரீதியாக பயன்படுத்தும் 190 வீடுகளில் மறு அளவீடு செய்யப்பட்டது. சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டு ரூ.3.36 கோடியாக உயர்த்தப்பட்டது.

100 வார்டுகளுக்கும் 100 குழுக்கள் சொத்து வரி நிர்ணயித்ததை அளவீடு செய்ய மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கும் 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வரி வசூலிப்பவர், தொழில்நுட்ப உதவியாளர், சுகாதார மேற்பார்வையாளர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு முதற்கட்டமாக 65 ஆயிரத்து 994 கட்டடங்களை ஆய்வு செய்யும். இதில் 40 ஆயிரத்து 261 வணிக கட்டடங்கள், 2315 தொழிற்சாலை கட்டடங்கள், 317 தனியார் கல்வி கட்டடங்கள், 23 ஆயிரத்து 101 வீடுகள் அடங்கும். இவற்றை மறு அளவீடு மற்றும் வரிவிதிப்பு செய்ய 6 மாதங்கள் அவகாசம் தேவை. இரண்டாம் கட்டமாக குறைவான சொத்து வரி மதிப்பீடுகள் கொண்ட 1 லட்சத்து 96 ஆயிரத்து 82 கட்டடங்களை மறு அளவீடு, வரிவிதிப்பு செய்ய 4 மாதங்கள் அவகாசம் தேவை.

மதுரை கலெக்டருடன் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒவ்வொரு மண்டலத்திலும் துணைக் குழுக்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி தாசில்தார் பதவிக்கு இணையான உதவி வருவாய் அதிகாரி மற்றும் ஆர்.டி.ஓ., பதவிக்கு இணையான உதவி கமிஷனரின் மேற்பார்வையில் ஒரு இளநிலை பொறியாளர் இடம்பெறுவர். நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழு, துணைக் குழுவால் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு அறிக்கைகளை கண்காணித்து சரிபார்க்கும். 11 பேர் கொண்ட குழு, துணைக் குழுக்கள், துணை (வருவாய்) கமிஷனரின் மேற்பார்வையில் செயல்படும்.

மாநகராட்சி கமிஷனருக்கு அறிக்கை அளிக்கும். அவர் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அறிக்கை அளிப்பார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அறிக்கைக்கு பாராட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கமிஷனரின் அறிக்கையில் இந்நீதிமன்றம் திருப்தி கொள்கிறது. பாராட்டுகள். இதன் மூலம் சரியான வரியை நிர்ணயித்து மாநகராட்சி வசூலிக்க முடியும். அவ்வருவாய் மூலம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும். இதுபோன்ற முறைகேடுகள் பிற மாநகராட்சிகளிலும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

மதுரை மாநகராட்சியின் செயல்திட்டத்தை பின்பற்றி பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அசையா சொத்துக்களை மறு அளவீடு செய்து வரி சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாக இயக்குனர், உள்துறை செயலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். அரசு தரப்பில் அக்.,27 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us