sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கைதி மர்ம மரணம் மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கைதி மர்ம மரணம் மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

கைதி மர்ம மரணம் மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

கைதி மர்ம மரணம் மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : அக் 31, 2025 02:49 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருச்சி மத்திய சிறையில் கைதி மரணத்தில் மர்மம் உள்ளதாக தாக்கலான வழக்கில் மறு பிரேத பரிசோதனை நடத்த உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பெரம்பலுார் ரேவதி தாக்கல் செய்த மனு: எனது மகன் சுபின் குமார் 19. கஞ்சா வைத்திருந்ததாகக்கூறி பெரம்பலுார் போலீசார் அவர் மீது பொய் வழக்கு பதிந்தனர். அவர் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக காவலில் வைக்கப்பட்டார்.

வலிப்பு நோய் காரணமாக சிறையிலுள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாக போலீசார் அக்., 24 தெரிவித்த னர். மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் என்பது தவறு. ஒருபோதும் வலிப்பு நோய் ஏற்பட்டதில்லை. சிறை அதிகாரிகளின் விளக்கம் முற்றிலும் தவறானது. சந்தேகத்திற்குரியது. மகன் போலீஸ் விசாரணையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி யிருக்கலாம் அல்லது சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்திருக்கலாம். இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அரசு இழப்பீடு வழங்க வேண்டும். உயர்நீதி மன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சுந்தர்மோகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகு மணி ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத் தரவு: திருச்சி அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என இடைக்கால உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us