sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உவரி கடற்கரையில் கேன்டீனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

/

உவரி கடற்கரையில் கேன்டீனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

உவரி கடற்கரையில் கேன்டீனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

உவரி கடற்கரையில் கேன்டீனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : செப் 27, 2025 05:33 AM

Google News

ADDED : செப் 27, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரை பகுதியில் கேன்டீன் அமைத்ததை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உவரியை சேர்ந்த அரசு தாக்கல் செய்த பொதுநல மனு:

உவரி கடற்கரையில் கிறிஸ்தவ சர்ச் அருகே அரசுக்கு சொந்தமானதடுப்பணை, மீன் இறங்கு தளம் அமைந்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்குட்பட்ட இப்பகுதியில் 500மீ., துாரத்தில் எவ்வித கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது. விதிகளுக்கு புறம்பாக உவரி பங்குத் தந்தை நிர்வாகம் சார்பில் கேன்டீன் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்த அமைத்திருந்த கம்பங்களை சேதப்படுத்தினர். கேன்டீன் கட்டுமானப் பணியை நிறுத்த அரசு தரப்பு மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிதொடர்கிறது.

கேன்டீன் துவக்க விழாவிற்கு தமிழக சபாநாயகர் அப்பாவுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேன்டீன் அமைக்க உவரியில் மாற்றாக காலியிடங்கள் உள்ளன.

தடை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கேன்டீன் அமைப்பதை அகற்ற மீன்வளத்துறை இயக்குனர், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரஜினி ஆஜரானர். நீதிபதிகள், 'கேன்டீனை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்,' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us