sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 30, 2025 04:06 AM

Google News

ADDED : ஆக 30, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மேம்பாட்டு பணி நிறைவு பெறவில்லை. கோயில் வளாகம் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை இணை கமிஷனர், கோயில் உதவி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜன் ஆஜரானார்.

அரசு தரப்பு, 'போலீசாரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என தெரிவித்தது. நீதிபதிகள், 'அந்நடவடிக்கையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us