/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 14, 2025 04:42 AM
மதுரை: பொது இடங்களிலுள்ள கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. சம்பந்தப்பட்ட கட்சிகள் சட்டப்படி தீர்வை தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப்பில் அ.தி.மு.க.,கொடிக் கம்பம் நட அனுமதிக்க உத்தரவிட அதன் நிர்வாகி கதிரவன் மனு தாக்கல் செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின.
ஜன.27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,'தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அரசின் பிற துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார்.
'மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என அதன் மாநில செயலாளர் சண்முகம் மனு செய்தார். ஜூன் 20 ல் நீதிபதி சி.சரவணன் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார்.
ஜூலை 22 ல் 3 நீதிபதிகள் அமர்வு, 'விருப்பமுள்ள கட்சிகள் விளக்கமளிக்க இவ்வழக்கில் இணைத்துக் கொள்ள இடையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உத்தரவிட்டனர். இவ்வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள அ.தி.மு.க.,-ம.தி.மு.க.,இந்திய கம்யூ.,-த.வெ.க., உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
ஆக.6 ல் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இடையீட்டு மனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அரசின் நிலைப்பாடு குறித்து கருத்து கோரப்படும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சவுந்தர் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: தனி நீதிபதி இளந்திரையனின் உத்தரவை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு மார்ச் 6 ல் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கலானது. அதை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றக் கிளை தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. கட்சிகள் சட்டப்படி தீர்வை தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.