sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

/

கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 


ADDED : அக் 24, 2025 02:32 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அழகர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஒத்தக்கடை அருகே ராஜகம்பீரம் கண்மாயில் குப்பைகள் தேங்கி, கழிவுநீர் கலக்கிறது. நிலத்தடி நீர் மாசடைந்து, நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்மாயை துார்வார கலெக்டரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கண்மாய் மாசுபடாதவாறு கழிவு நீர் கலக்காமல் தடுக்க மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருந்தால் மேல் நடவடிக்கை தேவையில்லை. ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் அகற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us