sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிலுவை வழக்குகள் தீர்வுக்கு ஐகோர்ட் யோசனை

/

நிலுவை வழக்குகள் தீர்வுக்கு ஐகோர்ட் யோசனை

நிலுவை வழக்குகள் தீர்வுக்கு ஐகோர்ட் யோசனை

நிலுவை வழக்குகள் தீர்வுக்கு ஐகோர்ட் யோசனை


ADDED : ஆக 19, 2025 01:36 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; 'கீழமை நீதிமன்றங்களில், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண தனி ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:

கீழமை நீதிமன்றங்களில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையிலுள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தீர்வு காணும் முன்னோடி திட்டத்தை இந்நீதிமன்றம் செயல்படுத்துகிறது.

இதன்படி, நிலுவை வழக்குகளை குறைக்க, விரைவாக விசாரிக்க வேண்டிய தகுதியான வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனின் அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளின் பட்டியலை தயாரித்து, அரசு வழக்கறிஞர்கள் மூலம் இவ்விவகாரத்தை கையாள காவல்துறை நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதற்காக, தனி ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிப்பது குறித்து டி.ஜி.பி., பரிசீலிக்கலாம்.

எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் மேற்பார்வையிட்டு, இந்நீதிமன்றத்திற்கு விரைவாக தகவல் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us