sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொங்கல் பரிசு ரொக்கம் வங்கி மூலம் வழங்க நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

/

பொங்கல் பரிசு ரொக்கம் வங்கி மூலம் வழங்க நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

பொங்கல் பரிசு ரொக்கம் வங்கி மூலம் வழங்க நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

பொங்கல் பரிசு ரொக்கம் வங்கி மூலம் வழங்க நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்


ADDED : டிச 04, 2024 08:37 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்புடன் பணமும் அடங்கிய பரிசுத் தொகுப்பை ரேஷன்கார்டுதாரர்களுக்கு சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கிவருகிறது.பொங்கல் தயாரிப்பிற்கு சீனியை(சர்க்கரை) மக்கள் பயன்படுத்துவதில்லை. 2025 ஜனவரி பொங்கல் பரிசுத் தொகுப்பில் சீனிக்கு மாற்றாக பாரம்பரிய நாட்டு வெல்லத்தை வழங்க வேண்டும். இதை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.கரும்பு கொள்முதலுக்குரிய தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதனால் இடைத்தரகர்கள், அரசியல் குறுக்கீடு, கமிஷன் பிரச்னை தவிர்க்கப்படும்.பரிசுத் தொகை ரூ.1000 ஐ மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல் ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: வங்கி கணக்கு மூலம் ரொக்கம் பட்டுவாடா செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. குறைந்தபட்ச தொகையை பராமரிக்காவிடில் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்கிறது.மனுதாரர் தரப்பு: ஏற்கனவே இதுபோல் மனுதாரர் தொடர்ந்த வழக்கில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரொக்கம் செலுத்துவது பற்றி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகள்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிடில் அவமதித்ததுபோலாகும். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: மனுதாரர் அனுப்பிய மனு மீது மற்றும் ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டிச.19 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us