sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் தகவல்

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் தகவல்

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : ஏப் 27, 2025 04:54 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விபத்தில் தாய், தந்தை, சகோதரனை இழந்த 4 பெண் குழந்தைகளை பராமரிக்க இழப்பீடு கோரியதில்,'​பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையால் பரிசீலிக்கப்படும்,' என தமிழக அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.

நத்தம் அருகே லிங்கவாடி செல்லம்மாள் தாக்கல் செய்த மனு:

எனது மகன் முருகன். அவரது மனைவி பஞ்சு. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்தனர். மகன், மருமகள் கூலி வேலை செய்தனர். மகன், மருமகள் மற்றும் பேரன் ஒரு டூவீலரில் நத்தம்- --மதுரை சாலையில் 2024 ஆக.22 ல் சென்றனர். அது விபத்திற்குள்ளானது. மூன்று பேரும் இறந்தனர். நத்தம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

நான்கு பேத்திகளை பராமரித்து வருகிறேன். இறப்புச் சான்று, சட்டப்பூர்வ வாரிசுச் சான்றுடன் முதல்வரின் பொது நிவாரண நிதி அல்லது பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி தமிழக உள்துறை கூடுதல் செயலர், டி.ஜி.பி., திண்டுக்கல் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

அரசு தரப்பு: ​மனுதாரரின் கோரிக்கை மனு திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,வின் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு எண் இடப்பட்டுள்ளது. மனுவின் மூப்புத் தன்மைக்கேற்ப (சீனியாரிட்டி) பரிசீலனைக்கு வரும்போது, ​​பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையால் அது முறையாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி பைசல் செய்தார்.






      Dinamalar
      Follow us