ADDED : மே 31, 2025 05:04 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் மோட்டார் பழுது காரணமாக 2 மாதங்களாக குளியல் தொட்டி செயல்படாமல் இருந்தது.
இதனால் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்ய சிரமமாக இருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து பி.டி.ஒ., கிருஷ்ணவேணி உடனடியாக நடவடிக்கை எடுத்து குளியல் தொட்டி செயல்பட ஏற்பாடு செய்தார்.
அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.
