sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போராட்டத்தில் பேராசிரியர்கள் பாடமின்றி மாணவர்கள் பாதிப்பு

/

போராட்டத்தில் பேராசிரியர்கள் பாடமின்றி மாணவர்கள் பாதிப்பு

போராட்டத்தில் பேராசிரியர்கள் பாடமின்றி மாணவர்கள் பாதிப்பு

போராட்டத்தில் பேராசிரியர்கள் பாடமின்றி மாணவர்கள் பாதிப்பு


ADDED : பிப் 17, 2024 02:11 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து அலுவலர்கள் நடத்திய மூன்றாவது நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் பேராசிரியர்களும் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான வகுப்புகள் நடக்கவில்லை. மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இப்பல்கலையில் நிலவும் நிதிப்பிரச்னை காரணமாக அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. பல்கலை நிர்வாகம் மாநில அரசை உரிய முறையில் அணுகி பிரச்னையை தீர்க்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிப்., 14 முதல் பல்கலையில் உள்ள 74 துறைகளில் அலுவலகங்களை மூடி 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று பேராசிரியர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். தவிர, அரசு ஊழியர்கள் சங்கம், அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தால் பல்கலை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வகுப்புகளும் நடக்காததால், மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us