sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காய்ச்சல் அதிகரிப்பு: சேடப்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் பாதிப்பு:  மழை நேரத்தில் சுகாதாரப்பணிகளில் தொய்வு

/

காய்ச்சல் அதிகரிப்பு: சேடப்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் பாதிப்பு:  மழை நேரத்தில் சுகாதாரப்பணிகளில் தொய்வு

காய்ச்சல் அதிகரிப்பு: சேடப்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் பாதிப்பு:  மழை நேரத்தில் சுகாதாரப்பணிகளில் தொய்வு

காய்ச்சல் அதிகரிப்பு: சேடப்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் பாதிப்பு:  மழை நேரத்தில் சுகாதாரப்பணிகளில் தொய்வு


ADDED : டிச 08, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் பகுதியில் காய்ச்சல், சளி, தொற்று நோய் அதிகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 72 ஊராட்சிகள் உள்ளன. கடந்த வாரம் பெய்த மழையால் கிராமப் பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் துாய்மை பணியாளர்களைக் கொண்டு ஓரளவுக்கு மழைக்காலங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

கிராமப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்ததாலும், பல ஊராட்சிகளில் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினாலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமங்களில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு கிராமத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதித்து, நோய் தொற்று ஏற்பட்டு சளி, இருமலுடன் மருத்துவமனை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கொசு மருந்து தெளிப்பதில்லை. அடிப்படை வசதிகளை செய்வதற்கு ஊராட்சி செயலர்கள் நிதி இல்லை என்கின்றனர். அரசு உடனே ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதியை விடுவித்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாத வகையில் மழை நீர், கழிவு நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us