/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் டாக்டரை சஸ்பெண்ட் செய்வதா; இந்திய மருத்துவ கழகம் கொந்தளிப்பு
/
பெண் டாக்டரை சஸ்பெண்ட் செய்வதா; இந்திய மருத்துவ கழகம் கொந்தளிப்பு
பெண் டாக்டரை சஸ்பெண்ட் செய்வதா; இந்திய மருத்துவ கழகம் கொந்தளிப்பு
பெண் டாக்டரை சஸ்பெண்ட் செய்வதா; இந்திய மருத்துவ கழகம் கொந்தளிப்பு
ADDED : நவ 13, 2024 06:30 AM

மதுரை : ''தமிழகத்தில் அரசு மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் மயிலாடுதுறையில் பெண் டாக்டரை சஸ்பெண்ட் செய்ததை ஏற்றுக் கொள்ளமுடியாது'' என இந்திய மருத்துவ கழக மதுரை கிளைத் தலைவர் டாக்டர் அழகவெங்கடேசன் மதுரையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிசேரியன் செய்யச் சொல்லி உறவினர்கள் வலியுறுத்தினர். சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பிருந்ததால் மகப்பேறு டாக்டர் சுகப்பிரசவம் செய்த நிலையில் குழந்தை சிகிச்சைக்கு பின் இறந்தது. இதற்கு மகப்பேறு டாக்டர் தான் காரணம் என்று மருத்துவப்பணிகள் இணை இயக்குநர், டாக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளார். அதேநாளில் 12 பிரசவம் பார்த்த டாக்டரை சஸ்பெண்ட் செய்தது தவறான முன்னுதாரணம்.
பெண் டாக்டர் பெயரை பொதுவெளியில் வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இணை இயக்குநரின் செயலை இந்திய மருத்துவ கழகம் சார்பில் கண்டிக்கிறோம். அவசர கதியில் தவறான புரிதலோடு இந்த விஷயத்தை கையாண்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு டாக்டர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்த டாக்டர்கள் மூலம் மகப்பேறு சேவை தடையின்றி நடத்தப்படுகிறது. 24 மணி நேரமும் மகப்பேறு சேவை செய்ய வேண்டுமெனில் ஒரு மருத்துவமனைக்கு குறைந்தது 6 மகப்பேறு டாக்டர்கள் தேவை. முழு 24 மணி நேரம் வேலை பார்த்தபின் மறுநாளும் ஓய்வின்றி வேலை பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் பணியாற்றும் பெண் டாக்டரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டி.எம்.எஸ்.) திரும்பப்பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலின், சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தலையிட்டு அரசு விதிகளை பின்பற்றி சஸ்பெண்ட் ரத்து செய்து இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

