sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 விபத்தில் பலியானதற்கு இழப்பீடு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

 விபத்தில் பலியானதற்கு இழப்பீடு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

 விபத்தில் பலியானதற்கு இழப்பீடு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

 விபத்தில் பலியானதற்கு இழப்பீடு  உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : மே 03, 2025 05:30 AM

Google News

ADDED : மே 03, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் விபத்தில் பலியானதற்கு இழப்பீடு கோரியதில்,' மனுதாரரின் மனு மூப்புத் தன்மை அடிப்படையில் பரிசீலனைக்கு வரும்போது, ​​இழப்பீடு வழங்கப்படும்,'என அரசு தரப்பு கூறியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் வேலம்மாள் தாக்கல் செய்த மனு:

எனது மகன் பிரபாகரன் 2024 ல் திருச்சி-- - புதுக்கோட்டை சாலையில் விபத்தில் இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்: போலீசார் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மனுதாரரின் மனுவிற்கு பதிவு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மூப்பு பட்டியல், மற்றும் நிதி இருப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. மனுதாரரின் மனு மூப்புத் தன்மை (சீனியாரிட்டி) அடிப்படையில் பரிசீலனைக்கு வரும்போது, ​​இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.






      Dinamalar
      Follow us