sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மொழியைக் கற்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்

/

மொழியைக் கற்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்

மொழியைக் கற்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்

மொழியைக் கற்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்


ADDED : ஏப் 04, 2025 05:12 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்வியலைக் கற்றுத்தருவதால் மொழியைக் கற்கவேண்டும்'' என மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த தமிழ்க்கூடல் நிகழ்வில் மதுரை வெள்ளைபாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் துளிர் தெரிவித்தார்.

ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார். 'தமிழ் வழிப்படூஉம் பெருவாழ்வு' எனும் தலைப்பில் துளிர் பேசியதாவது:

இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலத்தை இணைக்கும் கருவியாக மனிதன் மொழியைப் பயன்படுத்தினான். விலங்குகளிடம் எதிர்காலச் சிந்தனை இருக்காது. உலகின் மூத்தமொழி தமிழ் என்கின்றனர் மேலைநாட்டு அறிஞர்கள். மொழியைப் பயன்படுத்தும் விதத்தில் தமிழர்கள் உச்சகட்ட நாகரிகத்தை அடைந்துள்ளனர்.

தமிழும் சீனமும் வாழ்வியலோடு இணைந்த மொழிகள். சொல்பெருக்கு என்பது ஒரு மொழியின் வளர்ச்சியை உணர்த்துகிறது. அவ்வை ஆத்திசூடியின் 109 வரிகள் வாழ்வியலை கற்றுத்தருகின்றன. தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்வியலைக் கற்றுத்தருகிறது. எனவே மொழியைக் கற்கவேண்டும் என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us