ADDED : பிப் 15, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டியில் ஓராண்டுக்கு மேலாக பூட்டிக் கிடக்கும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஹார்விபட்டி - நிலையூர் ரோட்டில் மாநகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர நிலையத்தில் இருந்து தினமும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் குடிநீர், காலை 6:00 முதல் காலை 9:00 மணி வரை இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
ஓராண்டுக்கு மேலாக செயல்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. அப்பகுதி மக்கள் தனியார் லாரிகளில் குடம் ஒன்றுக்கு ரூ. 13 கொடுத்து வாங்குகின்றனர். அங்கிருந்த தண்ணீர் தொட்டியையும் காணவில்லை. குடிநீர் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

