/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அய்யனார் கோயில் தடுப்பணையில் ஆய்வு
/
அய்யனார் கோயில் தடுப்பணையில் ஆய்வு
ADDED : ஏப் 18, 2025 05:54 AM
எழுமலை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எம்.கல்லுப்பட்டி அய்யனார் கோயில் ஓடையில் 2008ல் தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணையில் மழைநீர் நிரம்பினாலும் சில நாட்களில் வற்றி விடுவதால், விவசாயிகள் தடுப்பணையை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். பலப்படுத்தும் பணிக்காக ரூ.3 கோடியே 69 லட்சம் ஒதுக்கி சட்டசபையில் அறிவித்தனர். அதற்காக நீர்வளத்துறை செயற்பொறியாளர் நிறைமதி, உதவிச் செயற்பொறியாளர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், ஏர்னஸ்டோ, விவசாய சங்க பிரதிநிதிகள் வினோத், ராமர், லட்சுமணன் தடுப்பணை பகுதியில் மண் பரிசோதனை நடத்தினர்.
மூன்று இடங்களில் 18 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு போர்வெல் போட்டு ஒவ்வொரு மீட்டருக்கும் இடையே உள்ள மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மாதிரிகள் எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவின் படி தடுப்பணை பலப்படுத்தும் பணிகள் நடக்கும் என்றனர்.

