ADDED : மார் 08, 2024 01:22 AM
எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் முதுகலைத் தமிழ்த்துறை, முத்தரசி கலை இலக்கியப் பண்பாட்டுத் தமிழாய்வு இதழ் சார்பில் பன்னாட்டு கத்தரங்கு நடந்தது. தமிழ்ச் சமூக சிந்தனை வெளியில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, தமிழ்த்துறைத் தலைவர் இந்திராமேரி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் செல்வக்குமாரி தலைமை வகித்தார். முத்தரசி ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் தங்கமாரி வாழ்த்தி பேசினார். நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னக்கிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், முன்னிலை வகித்தனர்.
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் சீதாலட்சுமி, சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மொழிப்புல முதன்மையர் தமிழ்த்துறைத் தலைவர் கவிதா பங்கேற்று கருத்தரங்க நுாலை வெளியிட்டு பேசினர்.

